search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூக வலைத்தளம்"

    • சில வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.
    • டெல்லியில் ஒருவர் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் எடுத்ததால் தற்போது கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இன்றைய உலகில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஏராளமான வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ்கள் பதிவிடப்படுகின்றன. இவற்றில் சில வீடியோக்கள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில வீடியோக்கள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன.

    அந்த வகையில், டெல்லியில் ஒருவர் வித்தியாசமான முறையில் ரீல்ஸ் எடுத்ததால் தற்போது கைதாகி சிறைக்கு சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    கைதான நபர் வெளியிட்டுள்ள வீடியோவில், சாலையில் வாகனங்கள் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வேளையில் சாலையின் நடுவே இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதன் அருகே ஒரு நாற்காலியில் கால்மேல் கால் போட்டு அமர்ந்து அந்நபர் வீடியோ எடுத்துள்ளார்.

    இந்த வீடியோ வைரலான நிலையில் ரீல்ஸ் எடுத்த நபரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

    • எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக குரங்கு முயற்சி செய்யும் காட்சிகளும், மற்றொரு குரங்கு சமையல் அறையின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் உள்ளன.
    • பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது பரவி வரும் இந்த வீடியோ பேசுபொருளாகி உள்ளது.

    கொளுத்தும் கோடை வெயிலில் மக்கள் மட்டுமின்றி விலங்குகளும் தாகத்தால் மிகவும் தவிக்கின்றனர். இந்நிலையில் தாகத்தில் இருந்து நிவாரணம் தேடி ஒரு வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்த குரங்கு அங்கிருந்த சுத்திகரிப்பு எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிக்க முயற்சிக்கும் வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.

    பெங்களூரை சேர்ந்த அக்ஷத் என்ற பயனரால் பகிரப்பட்ட அந்த வீடியோவில், ஒரு வீட்டின் ஜன்னல் திறந்து கிடக்கும் நிலையில், அதன் வழியாக குரங்குகள் வீட்டின் சமையல் அறைக்குள் செல்கின்றன. அதில் ஒரு குரங்கு சமையல் அறையில் உள்ள சுத்திகரிப்பு எந்திரத்தை நோக்கி செல்கிறது. பின்னர் எந்திரத்தில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக குரங்கு முயற்சி செய்யும் காட்சிகளும், மற்றொரு குரங்கு சமையல் அறையின் ஜன்னலில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் உள்ளன.

    பெங்களூரு நகரில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்த காட்சிகள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி இருந்த நிலையில் தற்போது பரவி வரும் இந்த வீடியோ பேசுபொருளாகி உள்ளது.


    • இன்ஸ்டாகிராமில் 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
    • பொது மக்களை குழப்பும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டனர்.

    உலகம் முழுவதும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பயனர்களின் கவனத்தை ஈர்க்க இளைஞர்கள் பலரும் வித்தியாசமான செயல்கள் மற்றும் சாகசங்களை செய்து வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவின் சாலைகளில் விசித்திரமான வடிவமைப்புடன் சென்ற காரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கார் தலைகீழாக கவிழ்ந்து சக்கரங்கள் மேலே இருக்கும் நிலையில், காரை டிரைவர் வழக்கம் போல ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன. சக்கரங்கள் மட்டுமின்றி கார் எண் உள்பட அனைத்துமே தலைகீழாக இருக்கும் நிலையில், பார்ப்பதற்கு தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் காரை எப்படி ஓட்டி செல்கிறார்? என்று பயனர்கள் திகைப்படையும் வகையில் வீடியோ உள்ளது.

    இன்ஸ்டாகிராமில் 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். சில பயனர்கள், வித்தியாசமான வடிவமைப்பிற்காக கார் உரிமையாளரை பாராட்டினர். அதே நேரம் சில பயனர்கள், பொது மக்களை குழப்பும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டனர்.



    • வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 7 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும் குவித்தது.
    • வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர்.

    நகரப் பகுதிகளில் உள்ள சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் திடீரென பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது பாய்வதும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதும் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் டெல்லியில் செல்போன் கடைக்குள் காளை மாடு ஒன்று சீறிப்பாய்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிராக் பர்ஜாத்யா என்ற பயனரால் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில் டெல்லியின் சங்கம்விஹார் பகுதியில் உள்ள ஒரு சிறிய செல்போன் கடையில் 2 வாலிபர்கள் வேலை பார்த்து கொண்டிருக்கின்றனர். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த காளை மாடு ஒன்று திடீரென அந்த செல்போன் கடைக்குள் சீறிப்பாய்ந்தது.

    இதனால் கடையில் இருந்த தொழிலாளர்கள் பீதியுடன் வெளியேற முயன்றனர். ஆனால் காளையை விரட்ட முயன்ற நிலையில் கடையின் கவுண்டரை திறக்க முடியாமல் அவதிப்பட்டனர். இந்த வீடியோ 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 7 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும் குவித்தது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் கருத்துக்களை பதிவிட்டனர். ஒரு பயனர், ஒரு மாடு சிறிய அறைக்குள் சீறிப்பாயும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என பதிவிட்டுள்ளார்.

    மற்றொரு பயனர், வீடியோ காட்சிகள் இல்லை என்றால் உங்கள் காப்பீட்டு நிறுவனத்தை நம்ப வைக்க முயற்சிப்பதை கற்பனை செய்து பாருங்கள் என கேளிக்கையாக பதிவிட்டார். இதே போல பயனர்கள் பலரும், 'சீனா கடையில் காளை' என்ற பிரபலமான பழமொழியுடன் இந்த காட்சி பொருந்துகிறது என குறிப்பிட்டிருந்தனர்.


    • இன்ஸ்டாகிராமில் தோனி பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி ஒரு நபர் பதிவு செய்திருந்தார்.
    • வணக்கம் நான் எம்.எஸ்.தோனி நான் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கணக்கில் இருந்து செய்தி அனுப்புகிறேன்.

    இன்றைய டிஜிட்டல் உலகில் வாட்ஸ்அப், பேஸ்புக், டெலிகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் நூதன மோசடி அரங்கேற்றும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கிரிக்கெட் வீரர் தோனி பெயரில் சமூகவலைத்தளம் மூலம் மோசடி செய்ய முயன்ற ஒருவரது பதிவு 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை ஈர்த்து வைரலாகி உள்ளது. இன்ஸ்டாகிராமில் தோனி பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி ஒரு நபர் பதிவு செய்திருந்தார். அதில், வணக்கம் நான் எம்.எஸ்.தோனி நான் உங்களுக்கு ஒரு தனிப்பட்ட கணக்கில் இருந்து செய்தி அனுப்புகிறேன். நான் ராஞ்சியில் புறநகரில் இருக்கிறேன். பணப்பையை மறந்து வைத்து விட்டேன். எனக்கு ரூ.600 அனுப்ப முடியுமா? நான் வீட்டிற்கு சென்றதும் திருப்பி அனுப்புகிறேன் என கூறப்பட்டிருந்தது.

    இந்த பதிவு சமூக ஊடகங்களில் சில மணி நேரங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் மோசடி நபரை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டனர்.

    • தாய் மீது அதிக அன்பு கொண்ட சிறுவனை ஊக்குவிக்கும் வகையில் அவனது தாயின் பிறந்தநாளை நடுவானில் கொண்டாட ஏற்பாடு செய்தனர்.
    • வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் செயலையும், ஏர் இந்தியா விமான கேபின் குழுவினரையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த போது தனது தாயின் பிறந்தநாளை புதுமையாக கொண்டாடி இன்ப அதிர்ச்சி அளித்த சிறுவனின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    பொதுவாக பிறந்தநாள் அன்று இரவு 12 மணிக்கு கேக் வெட்டி கொண்டாடுவதை அனைவரும் விரும்புவர். தாயின் பிறந்தநாள் அன்று விமானத்தில் சென்றதால் சிறுவன் நடுவானிலேயே அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க திட்டமிட்டான்.

    அதன்படி விமான கேபின் பணியாளர்களிடம் இதுகுறித்து சிறுவன் கூறினான். அவர்கள், தாய் மீது அதிக அன்பு கொண்ட சிறுவனை ஊக்குவிக்கும் வகையில் அவனது தாயின் பிறந்தநாளை நடுவானில் கொண்டாட ஏற்பாடு செய்தனர். அதன்படி விமான கேபின் பணியாளர் இதுகுறித்து மைக்கில் அறிவிக்கவும், விமான பயணிகள் பலரும் சிறுவனின் தாயாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து பணிப்பெண்கள் ஒரு தட்டில் சாக்லேட்டுகளையும், வாழ்த்து குறிப்புகளையும் கொண்டு வந்து சிறுவனின் தாயாரிடம் கொடுத்து வாழ்த்தினர்.

    இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி 85 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 4,500-க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் சிறுவனின் செயலையும், ஏர் இந்தியா விமான கேபின் குழுவினரையும் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.



    • தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார் குதிரைகளை பத்திரமாக மீட்டனர்.
    • வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    மத்திய லண்டனில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வெள்ளை, கருப்பு நிறத்தில் 2 குதிரைகள் ரத்தம் சொட்ட, சொட்ட ஓடும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில் 2 குதிரைகளின் உடலில் இருந்தும் ரத்தம் வழிகிறது.

    லண்டனின் வரலாற்று நிதி மையத்திற்கும், நகரின் பொழுதுபோக்கு மையமான வெஸ்ட் என்ட் பகுதிக்கும் இடையே ஆல்ட்விச் அருகே தெரு வழியாக அந்த 2 குதிரைகளும் ஓடிய காட்சிகளை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த போலீசார் அந்த குதிரைகளை பத்திரமாக மீட்டனர். போலீஸ் படையை சேர்ந்த அந்த குதிரைகள் பகல் நேர பயிற்சியின் போது தப்பித்து வந்ததும், சாலையில் ஓடிய போது வாகனங்கள் மீது மோதி ரத்தக்காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    இதுதொடர்பான வீடியோக்கள் எக்ஸ் தளத்தில் பரவிய நிலையில், லண்டன் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், மேலும் சில குதிரைகள் இதுபோன்று பயிற்சியின் போது ஓட்டம் பிடித்துள்ளன. அவற்றையும் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தனர்.


    • வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.
    • வீடியோவைப் பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

    சமூக வலைதளங்களில் புதுமையான உணவு தயாரிப்பு தொடர்பாக ஏராளமான வீடியோக்கள் பதிவிடப்படுகின்றன. அதில் சில உணவு வகைகள் பயனர்கள் மத்தியில் வரவேற்பையும், சில உணவு வகைகள் விமர்சனத்தையும் ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் தர்பூசணி ஜூஸ் சேர்த்து சிக்கன் பிரியாணி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இன்ஸ்டாகிராமில் பரவி வரும் அந்த வீடியோவில், சில இளைஞர்கள் தர்பூசணி பழங்களை கழுவி, வெட்டும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் அந்த பழங்களை துண்டு, துண்டாக வெட்டி ஜூஸ் தயாரிக்கின்றனர். அது முடிந்ததும், கோழி இறைச்சி வெட்டி ஒரு பெரிய கடாயில் போட்டு எண்ணெய், மசாலா, இஞ்சி, பூண்டு சேர்த்து தயாரிக்கிறார்கள். அதன்பிறகு சிக்கன் கலவையில் தர்பூசணி ஜூஸை சேர்த்து, பாஸ்மதி அரிசி போட்டு பிரியாணி தயாரிக்கும் காட்சிகள் உள்ளது. அந்த வீடியோ வைரலாகி 81 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், ஆயிரக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

    இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தர்பூசணிகளை வீணடித்துவிட்டீர்கள் எனவும், மிகப்பெரிய உணவான பிரியாணியை கெடுக்காதீர்கள் எனவும் பதிவிட்டு வருகின்றனர். சில பயனர்கள், இது ஒருபோதும் சுவையாக இருக்காது எனவும், இதை சாப்பிட்ட பிறகு ஆம்புலன்சிற்காக காத்திருக்க நேரிடும் எனவும் பதிவிட்டு உள்ளனர்.


    • நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்.
    • நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

    வீட்டிற்குள் நுழைய முயன்ற முதலையை நாய் குரைத்து விரட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிறது.

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாடாலியா ரோஜாஸ் என்பவரின் பண்ணைவீடு ஒரு குளத்தை ஒட்டி உள்ளது. அதில் இருந்து வெளியேறிய முதலை ஒன்று அவரது வீட்டின் முற்றத்திற்கு வந்தது. கண்ணாடி கதவுக்கு வெளியே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்த முதலையை வீட்டில் வளர்த்த நாய் கவனித்தது. உடனே அது பயங்கரமாக குரைக்கத் தொடங்கியதால் முதலை மிரண்டுபோய் குளத்தை நோக்கி ஓடி மறைந்தது. நாய் குரைத்ததும் வாசலுக்கு வந்த நடாலியா வெளியே முதலை நிற்பதைப் பார்த்து அதிர்ந்து போனார். நாய்க்கு பயந்து முதலை சென்றுவிட்டதால் நிம்மதி பெருமூச்சுவிட்டார்.

    வீட்டில் இருந்த கேமராவில் பதிவான இந்த காட்சிகளை அவர் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டார். வீடியோ வைரலானது. பல லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.

    "நாய் குரைத்ததால் முதலை ஓடியிருக்கலாம், ஆனால் நாய்க்காகத்தான் முதலை உங்கள் வீட்டிற்கு வந்தது" என்று ஒருவர் கருத்து பதிவிட்டு இருந்தார். மேலும் பலர் நாயின் தைரியத்தை பாராட்டி பதிவிட்டு இருந்தனர்.

    • வளையலை பரிசோதனை செய்த போது அது கி.பி. 1-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க வளையல் என தெரியவந்தது.
    • சிறுவனின் தாயார் கூறுகையில், ரோவன் எப்போதும் பூமியில் இருந்து பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறான்.

    இங்கிலாந்தை சேர்ந்த ரோவன் என்ற 12 வயது சிறுவன் தனது செல்லப்பிராணியுடன் அப்பகுதியில் நடைப்பயிற்சி சென்றுள்ளான். அப்போது தரையில் ஒரு வினோதமான பொருள் தட்டுப்பட்டுள்ளது. மங்கிய நிலையில் காணப்பட்ட அந்த பழைய காலத்து வளையலை கொண்டு போய் தனது தாயிடம் கொடுத்தான்.

    அதை வாங்கிய அவனது தாய் இது பழைய வளையல் என்று குப்பையில் வீச நினைத்தார். ஆனாலும் திடீரென அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இதனால் அந்த வளையலை பரிசோதனை செய்த போது அது கி.பி. 1-ம் நூற்றாண்டை சேர்ந்த தங்க வளையல் என தெரியவந்தது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான அந்த வரலாற்று பொருள் சிறுவன் கையில் கிடைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

    இதுகுறித்து சிறுவனின் தாயார் கூறுகையில், ரோவன் எப்போதும் பூமியில் இருந்து பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறான். அவன் அவ்வாறு செய்யும் போது நான் அவனை திட்டினாலும் தற்போது அவனது கையில் வரலாற்று பழமைவாய்ந்த தங்க வளையல் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    • தலையில் ஆயில் தேய்த்து கழுத்து, நெற்றி பகுதிகளில் மசாஜ் செய்ததால் மேக்ஸ் வியப்படைந்தார்.
    • வீடியோ வைரலான நிலையில் முகமது வாரிஸ் இணையத்தில் பிரபலமாகி வருகிறார்.

    சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்து விட்ட நிலையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தங்களது தனித்திறமையால் சமூக வலைதளங்களில் திடீர் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் டெல்லியை சேர்ந்த சவரத்தொழிலாளி ஒருவர் தற்போது உலக அளவில் பிரபலமாகி உள்ளார்.

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூப்பரான மேக்ஸ் என்பவர் சமீபத்தில் இந்தியா வந்துள்ளார். டெல்லியில் ஒரு சாலையோர சலூன் கடைக்கு சென்ற அவருக்கு அங்கிருந்த சவரத்தொழிலாளியான முகமது வாரிஸ் என்பவர் அருமையாக மசாஜ் செய்துள்ளார். அவர் தலையில் ஆயில் தேய்த்து கழுத்து, நெற்றி பகுதிகளில் மசாஜ் செய்ததால் மேக்ஸ் வியப்படைந்தார்.

    தொழிலாளியின் மசாஜ் காட்சிகளை வீடியோ பதிவு செய்த மேக்ஸ் அதனை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டதோடு, முகமது வாரிஸ் மசாஜ் செய்வது நிபுணத்துவம் பெற்றதாக திகழ்கிறார் என பாராட்டியுள்ளார்.

    அவரது இந்த வீடியோ வைரலான நிலையில் முகமது வாரிஸ் இணையத்தில் பிரபலமாகி வருகிறார்.

    • ஒரே ஒரு சிறை போன்ற அறையுடன் கூடிய பகுதியை பிளாட்டாக மாற்றி அதனை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளனர்.
    • சிறை அமைப்புடன் கூடிய அறை மட்டுமல்லாது அந்த பிளாட்டின் சமையலறை மற்றும் 3 அறைகள் உள்ளன.

    ஜெயில் அறை போன்ற அமைப்புடன் கூடிய குடியிருப்பு ஒன்று மாதம் ரூ.77 ஆயிரம் வாடகைக்கு விடப்படுவதாக ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

    இங்கிலாந்தின் டட்லி பகுதியில் அமைந்திருந்த போலீஸ் நிலையத்திற்கு சொந்தமான இந்த கட்டிடம் கடந்த 2017-ம் ஆண்டு மூடப்பட்டு குடியிருப்புகளாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்குள்ள ஒரே ஒரு சிறை போன்ற அறையுடன் கூடிய பகுதியை பிளாட்டாக மாற்றி அதனை வாடகைக்கு விடுவதாக அறிவித்துள்ளனர்.

    இதற்கு வாடகை கட்டணமாக மாதம் 750 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.77 ஆயிரம்) நிர்ணயித்துள்ளனர். மேலும் சிறை அமைப்புடன் கூடிய அறை மட்டுமல்லாது அந்த பிளாட்டின் சமையலறை மற்றும் 3 அறைகள் உள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


    ×